விளைச்சல் அதிகம்... கேந்தி பூக்கள் விலை கடும் சரிவு.. குப்பையில் கொட்டப்படும் சோகம்!
நெல்லை: நெல்லை அருகே கேந்தி பூக்கள் அதிகமாக விளைச்சல் கண்டுள்ளதால் அவற்றின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கத்தில உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர், அருணாசலபேரி, பட்டமுடையார்புரம், வடக்கு சிவகாமிபுரம், பால்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம், பெத்தநாடார்பரட்டி, அரியபுரம், குலசேகரப்பட்டிணம், பாண்டியாபுரம், மேலப்பாவூர் பகுதியில் பல விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு பறிக்கப்படும் பூக்களை விவசாயிகள் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருவர். இங்கிருந்து நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகள், மற்றும் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் பூக்கள் கொண்டு செல்லப்படும். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேந்தி பூ விலை ரூ.50க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் கேந்தி பூ விலை உயரவே இல்லை.
தற்போது நாள்தோறும் நான்கு ஆயிரம் கிலோ பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் வியாபாரிகள் வெறும் 500 கிலோ மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் இந்த பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வராமல் தோட்டத்திலேயே அப்படியே போட்டு வைத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், "கேந்தி பூக்களை தமிழக கோயில்களில் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளனர். கேரள வியாபாரிகள் தான் இவற்றை அதிகம் வாங்கி செல்வர். தற்போது கேந்தி பூக்கள் விளைச்சல் நன்றாக இருக்கும் நிலையில் அவற்றை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றால் அவற்றை வியாபாரிகள் குறைந்த அளவே வாங்குகின்றனர். இதனால் மீதி பூக்களை குப்பையில் கொட்டுவதை தவிர வேறு வழியில்லை" என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications