ஆட்டோ டிரைவரை பழி வாங்க லாரியை மோத விட்டு 6 பேரை கொன்ற கொலையாளி கோர்ட்டில் சரண்!
நெல்லை: நெல்லை அருகே ஆட்டோ டிரைவரை பலிவாங்க லாரியை மோதவிட்டு 6 பேரை கொன்ற கொலையாளி திருமலைக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் புதூர் அருகே எதிரே நேற்று முன்தினம் லாரி மோதியதில் ஆட்டோவில் இருந்த 6 பேர் பலியானார்கள்

(15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலைக்குமார்)
முதலில் விபத்தாக இது கருதப்பட்டது. ஆனால் ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமியுடன் இருந்த முன்விரோதம் காரணமாகவே லாரியை ஓட்டி வந்த திருமலைக்குமார் திட்டமிட்டு விபத்தை போல ஏற்படுத்தி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது; ஒருவரை பலிவாங்க அப்பாவி 5 பேரையும் திருமலைகுமார் படுகொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவான திருமலைக்குமாரை கைது செய்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் பலியான ஓட்டுநர் கருப்பசாமி குறித்து திருமலைக்குமாருக்கு உளவு தகவல் சொன்ன ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருமலைக்குமாரை போலீஸ் நெருங்கிய நிலையில் அவன் இன்று திடீரென செங்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான். அவனை நெல்லை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications