நெல்லையில் தொடர்ந்து கொட்டும் மழை- மக்கள் மகிழ்ச்சி!
நெல்லை: நெல்லையில் ஒரு வாரத்திற்கு பின்னர் பலத்த இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவ மழை படிப்படியாக உயர்ந்து கொண்டே போய் கடைசியாக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் குறைந்து போய் விட்டது.

இதனால் பாபநாசம் அணையின் நான்கு கால்வாய்களில் மட்டும் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நெல்லை கால்வாய், பழையக்கால்வாய், கோடகன் கால்வாய் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களில் கார் பருவ நெல் சாகுபடி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 7.30 மணி நிலவரப்படி மழை பெய்து கொண்டிருக்கிறது. நெல்லை சந்திப்பு, சமாதானபுரம், விஎம் சத்திரம், என்ஜிஓ காலனி, தச்சநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த இடி, மின்னல் காணப்பட்டது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணை நீர்மட்டம் 59 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 481 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 69.72 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 52.91 அடியாக உள்ளது.
குண்டாறு அணை ஏற்கனவே அதன் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி விட்டது. அணைக்கு வரும் 1 கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. கருப்பா நதி அணையில் மட்டும் 4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது இரண்டாவது கட்ட சீசன் என வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Nellai filled with monsoon continuously. Kutralam falls filled due to the heavy rain.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications