நெல்லை: தனியாக சென்ற நர்சை பலாத்காரம் செய்ய முயற்சி
நெல்லை: நெல்லையில் இரவில் தனியாக நடந்து சென்ற நர்சை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் லட்சுமி. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆகாததால் பாளையங்கோட்டை சாந்தி நகர் அருகே உள்ள கிருபா நகரில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமி தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு இரவு 10 மணி அளவில் சாந்தி நகருக்கு பஸ்சில் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கிருபா நகருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அதிர்ச்சியில் உறைந்த அவர் கூச்சல் போடவே சத்தம் கேட்டு அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த இருவரும் லட்சுமியிடம் இருந்த செல்போன், பணம், மற்றும் அணிந்திருந்த நகைகளையும் பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாளை குற்றப் பிரிவு போலீசார் விரைந்து வந்து லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். லட்சுமி அணிந்திருந்தது கவரிங் நகை என்பதும், செல்போன், மற்றும் பர்சில் வைத்திருந்த ரூ.200ஐ மர்ம நபர்கள் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications