நெல்லை: தனியாக சென்ற நர்சை பலாத்காரம் செய்ய முயற்சி
நெல்லை: நெல்லையில் இரவில் தனியாக நடந்து சென்ற நர்சை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் லட்சுமி. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக வேலை பார்த்து வருகிறார். திருமணம் ஆகாததால் பாளையங்கோட்டை சாந்தி நகர் அருகே உள்ள கிருபா நகரில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளார்.
இந்நிலையில் லட்சுமி தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு இரவு 10 மணி அளவில் சாந்தி நகருக்கு பஸ்சில் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கிருபா நகருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அதிர்ச்சியில் உறைந்த அவர் கூச்சல் போடவே சத்தம் கேட்டு அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த இருவரும் லட்சுமியிடம் இருந்த செல்போன், பணம், மற்றும் அணிந்திருந்த நகைகளையும் பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாளை குற்றப் பிரிவு போலீசார் விரைந்து வந்து லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். லட்சுமி அணிந்திருந்தது கவரிங் நகை என்பதும், செல்போன், மற்றும் பர்சில் வைத்திருந்த ரூ.200ஐ மர்ம நபர்கள் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications