For Daily Alerts
Just In
கல்நெஞ்ச காய்ச்சலே... அம்மாவை சீண்டாதே... நெல்லையில் 'பரபர' போஸ்டர்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை பாதித்த காய்ச்சலுக்கும் கண்டனம் தெரிவித்து 'விசுவாசத்தை' வெளிப்படுத்தியிருக்கிறார் நெல்லை 'அம்மா பக்தர்' சுரேஷ்.
போஸ்டர் அடிப்பதிலும் பட்டங்கள் கொடுப்பதிலும் அதிமுகவினர் பிஹெச்டி பட்டமே வாங்கியவர்கள்தான்... நாம் நினைத்து கூட பார்க்க முடியாத பட்டங்களையெல்லாம் சூட்டுவதில் அதிமுகவினர் கில்லாடிகள்...
தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைய தங்களுக்கே உரித்தான பாணியில் வழிபாடுகளை செய்து வருகின்றனர்.
இவர்களை மிஞ்சும் வகையில் நெல்லை 'அம்மா பக்தர்' சுரேஷ் அடித்துள்ள போஸ்டர்தான் அடடே நாம யோசிக்காம விட்டுவிட்டோமே என அதிமுகவினரை மிரட்டியுள்ளது.. உலக வரலாற்றிலேயே முதல் முறையாக காய்ச்சலுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்தான் இது:
Comments
English summary
A poster put up in Nellai on warning to fever which was affect Tamilnadu CM Jayalalithaa.
Story first published: Tuesday, September 27, 2016, 14:14 [IST]