தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி- கட்சி கொடிகள் தயாரிப்பு மும்முரம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் கொடிகளுக்கு கிராக்கி ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அவற்றை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர வியாபாரிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 24 ஆம் தேதி ஓரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் தங்களது கட்சி வேட்பாளருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது வழக்கம்.

பிரச்சாரம் செய்ய செல்லும் இடங்களில் கட்சி கொடிகளின் தோரணங்கள், கொடி கம்பங்கள், தொண்டர்களுக்கு பேட்ஜ் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இதற்காக நெல்லை டவுனில் அனைத்து கட்சி கொடிகளின் பேட்ஜ்கள், தோரணங்கள், பேனர்கள் இப்போதே விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது.

கட்சி கொடி விற்பனை என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் நடக்கும் சீசன் வியாபாரம் என்பதால் தொண்டர்களும், நிர்வாகிகளும் அதனை போட்டி போட்டு வாங்கி செல்வர். இதில் கார்களில் கட்டும் கொடிகள் மட்டும் அதிக விலை உள்ளதாக இருக்கும்.

கம்பங்களில் கட்டப்படும் கொடி ரூ.15, பேட்ஜ் ரூ.10, தோரணங்கள் ரூ.90 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிமுக, தேமுதிக, திமுக, பாமக, காங்கிரஸ், மதிமுக, பாஜக, கம்யூ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடிகள், தோரணங்கள், பேட்ஜ்கள் விற்பனைக்காக இப்போதே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்தல் ஏற்பாடுகளும், பிரச்சாரங்களும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+