மெதுவாக செல்லும் செங்கோட்டை ரயில்: அதிர்ச்சி- கோபத்தில் பயணிகள்
நெல்லை: நெல்லையிலிருந்து செங்கோட்டை வரும் ரயில் தாமதமாக வருவதால் பயணிகள் கோபத்தில் உள்ளனர்.
நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு தினமும் வேலைக்கு செல்வோரின் நலனை கரத்தில் கொண்டு 4 முறை இயக்கப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் 6.45 மணிக்கும், அதன் தொடர்ச்சியாக 9.15 மணிக்கும் செங்கோட்டைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
காலை 9.15 வரும் ரயிலை சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். காலை 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் இந்த ரயிலை பிடிப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்தை அடைவது எளிதாக இருந்து வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக காலை 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படுவதாக இல்லை. இந்த ரயில் கடந்த சில நாட்களாக 9.50 மணிக்கு புறப்பட்டு செல்வதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களும், தனியார் ஊழியர்களும் குறி்ப்பிட்ட நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
பேருந்து பயணத்தில் டிக்கெட் விலை கூடுதலாக இருப்பதால் தான் பலரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களும் பிரச்சனை செய்து வருவதால் ரயில் பயணிகள் கோபத்தில் உள்ளனர்.
செங்கோட்டை ரயில் காலை 8.45 மணிக்கே நெல்லை வந்து விடும் நிலையில் சுமார் அங்கு 1 மணி நேரம் பிளாட்பாரத்தில் நிறுத்தி வைப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது. காலை நேரத்தில் திருச்செந்தூரில் இருந்து பயணிகள் ரயில் 9.15 மணிக்கு வந்த பின்னர் அதன் இன்ஜினை கழற்றி பொருத்திய பிறகே செங்கோட்டை ரயில் புறப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ரயில்வே நிர்வாகம் இழப்பை சந்திக்க போகிறது என்று பயணிகள் குமுறுகின்றனர்.












Click it and Unblock the Notifications