விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா ராஜினாமா: பெண் மேயர்கள் எண்ணிக்கை 4 ஆக குறைவு
நெல்லை: ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பாஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பெண் மேயர்களின் எண்ணிக்கை 6 பேரில் இருந்து 4 பேராக ஆக குறைந்துள்ளது.

10ல் 6 மேயர்கள்
சென்னை,கோவை,திருச்சி,மதுரை,சேலம்,திருப்பூர்,ஈரோடு,வேலூர்,நெல்லை,தூத்துக்குடி,ஆகிய 10 மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளது.
இதில் வேலூர்,ஈரோடு,திருப்பூர்,திருச்சி,நெல்லை,தூத்துக்குடி,ஆகிய 6 மாநகராட்சிகளில் அதிமுகவை சேர்ந்த பெண்கள் மேயர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

ராஜ்யசபா உறுப்பினர் பதவி
நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பாஆகியோர் அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி.,தேர்தலுக்கான வேட்பாளர்களாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர்

மேயர் பதவி ராஜினாமா
ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு முன்பாக ஏற்கனவே அவர்கள் வகிக்கும் உள்ளாட்சி பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

விஜிலா சத்யானந்த்
மேயர் விஜிலா சத்தியானந்த் தமது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை மாநகராட்சியின் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஜெய் சேவியர் வசம் நேற்று ஒப்படைத்தார்.
இன்றுமாலை 5 மணிக்கு துணை மேயர் ஜெகநாதன் தலைமையில் நெல்லை மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் நடைப்பெருகிறது.இந்த கூட்டத்தில் மேயரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படஉள்ளது.

சசிகலா புஷ்பா ராஜினாமா
அதே போல் தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து இன்று பகல் 12.30 மணிக்கு சிறப்பு கூட்டம் துணை மேயர் சேவியர் தலைமையில் நடைபெறுகிறது.

4 பெண் மேயர்கள்
நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாநகராட்சிகளுக்கு மேயர் பதவி காலியாவதால் 6.ல் இருந்து பெண் மேயர்களின் எண்ணிக்கை 4ஆக குறைந்துள்ளது. அதே போல தமிழக்கத்தில் 4 ஆண் மேயர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications