உங்க இலவசத்தை நீங்களே வச்சுக்குங்க.. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பெண்களால் பரபரப்பு
நெல்லை: எங்களுக்கு அரசு தரும் இலவசப் பொருட்கள் வேண்டாம். மது விலக்கை அமல்படுத்தினால் போதும் என்று கூறி இலவசப் பொருட்களுடன் பெண்கள் குவிந்ததால், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் அரசின் முக்கிய வருவாய்களில் இருந்து பொதுமக்களுக்கு இலவச நலத்திட்டங்கள வழங்கப்பட்டு வருகின்றன. இதில் டாஸ்மாக்கின் பங்கு முக்கிய இடத்தில் உள்ளது.

தற்போது பல இடங்களிலும் மதுவிலக்கை அமுல்படுத்த கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்து வருகின்றன. இநத நிலையில் அரசு வழங்கிய இலவச பொருட்கள் கூட வேண்டாம், மது விலக்கு தான் வேண்டும் என்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் நடத்திய போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடம்பட்டி கிராமம். இதன சுற்றுப்புற கிராமங்களை சேர்நத சுமார் 50 பேர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை திரண்டு வந்தனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, டிவியை அரசிடம் ஓப்படைப்பதற்காக அவர்கள் கொணடு வந்திருந்தனர். அதிகாரிகளிடம் இலவச பொருட்களை அவர்கள் ஓப்படைத்தனர்.
ஆனால் அதிகாரிகள் அதை பெற்றுக் கொள்ள முடியாது என மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அதிகாரிகளின் பேச்சை ஏற்று கொள்ளாமல் கலெக்டர் அலுவலகத்திலேயே பொருட்களை வைத்து விட்டு சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மதுவிலக்கை அமுல்படுத்த கோரி
மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications