தமிழக அரசின் புயல் சீரமைப்பு பணிகள்.. ஆஹோ ஓஹோவென புகழும் நெட்டிசன்கள்
சென்னையில் புயல் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
சென்னை: தமிழக அரசின் புயல் சீரமைப்பு பணிகள் நெட்டிசன்கள் வெகுவாக புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
சென்னையை கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் பெரும் வெள்ளம் மூழ்கடித்தது. அப்போது அரசு நிர்வாகம் முற்றாக முடங்கிப் போனது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

உயிரிழப்புகளுக்கும் பெரும் சேதங்களுக்கும் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் பெரும் குற்றச்சாட்டாக இருந்தது. இந்த முறை வர்தா புயல் சென்னையை தாக்கும் என முறையாக அறிவித்தது சென்னை வானிலை மையம்.
இதையடுத்து தமிழக அரசு தரப்பில் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது வர்தா புயலின் கோரத்தாண்டவ பாதிப்புகளையும் துரித கதியில் சீரமைத்து வருகிறது தமிழக அரசு. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நல்லவேளை கவுன்சிலர்கள் இல்லை...

சென்னையை சீரமைக்கிறது

அடுத்த நாளே இயல்பு நிலை...

போன வருஷமும் அக்கறையாக...

முதல்வராக உணர்ந்த தினம்













Click it and Unblock the Notifications