"வைதேகி காத்திருந்தாள் ஆல் இன் ஆல் அழகுராஜா" மு.க. ஸ்டாலினை மீண்டும் கலாய்க்கும் நெட்டிசன்கள்..
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 'நமக்கு நாமே' பயண புகைப்படங்கள்தான் இப்போது நெட்டிசன்களின் லேட்டஸ்ட் வறுவல்..
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து 'நமக்கு நாமே' என்ற பயண திட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.. ஆட்டோவில் புட் போர்டு அடிப்பது, ஹெல்மெட் போட்டும் போடாமலும் வண்டி ஓட்டுவது, இருட்டுக் கடை அல்வா சாப்பிடுவது, வயலில் இறங்கி பேசுவது என கலந்து கட்டி கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் எதையுமே விட்டுவைக்கப் போவதில்லை என்று நெட்டிசன்கள் சபதமெடுத்திருக்கிறார்கள் போல.. இதோ லேட்டஸ்ட் 'வறுவல்கள்

கைத்தொழில்
நெசவுத் தொழிலாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் அப்போது ஒரு மூதாட்டியிடம் இருந்து நூல் நூற்றலை செய்து பார்த்தார்.. இந்த புகைப்படம் வெளியான சிறிதுநேரத்திலேயே நெட்டிசன்கள் வேலையை காண்பித்து விட்டனர்.. அதில் ஒன்று இது...

வைதேகி காத்திருந்தாள்..
இன்னொரு நெட்டிசனோ, ஸ்டாலினின் இந்த படத்தைப் போட்டு வைதேகி காத்திருந்தாள் ஆல் இன் ஆல் அழகுராஜாவை ஒரு சேர்த்துவிடப் போறாங்க என போட்டு முடிக்கத்தான் செய்தார்...

ரிலீஸ் ஆகிடுச்சே..
அந்த நெட்டிசனின் பதிவிலேயே இந்த படத்தை ரிலீஸ் ஆக்கிவிட்டிருக்கின்றனர்..

ஏழ்மையான தளபதி
அதேபோல் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பெண்களுடன் ஸ்டாலின் உரையாடும் படம் ஒன்றைப் போட்டு "இன்றைய
தமிழக அரசியல் தலைவர்களில்
இப்படி ஒரு ஏழ்மையான
தலைவர் தளபதி அவர்கள். என்று விளக்கம் கொடுத்திருந்தார்கள்.. விட்டு வைப்பார்களா நெட்டிசன் அண் கோ
அதற்கு போட்டிருக்கும் பின்னூட்டத்தை பாருங்கள்..

பூனைக்குட்டி
இன்னொரு நெட்டிசனின் வேலையை பாருங்க ...












Click it and Unblock the Notifications