ஓபிஎஸ் மனம் திறந்து பேசுறாரே.. தர்மயுத்தம் 2 தொடங்கப்போறாரா? ஆர்வத்தில் நெட்டிசன்கள்!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி இணைப்பு குறித்தும் சசிகலா குடும்பத்தினர் குறித்தும் பேசிய தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சூட்டை கிளப்பியுள்ளது.
Recommended Video
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி இணைப்பு குறித்தும் சசிகலா குடும்பத்தினர் குறித்தும் பேசிய தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சூட்டை கிளப்பியுள்ளது.
தேனியில் நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி கூறியதால் கட்சி இணைப்புக்கு சம்மதித்ததாக தெரிவித்தார்.
மேலும் சசிகலா குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் கூறினார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
அடுத்து என்ன நடக்கும் ?!
ஓபிஎஸ் மனம் திறந்து பேசுறாரே அடுத்து என்ன நடக்கும் ?! என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
கேட்டு சொல்லுங்க தலைவரே
பிரதமர் கூறியதால் தான் அணிகள் இணைப்பு நடந்தது - ஓபிஎஸ் #
நதிகள் இணைப்பு எப்போனு கேட்டு சொல்லுங்க தலைவரே! என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்
|
தர்மயுத்தம் 2?
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.. ஓபிஎஸ் பகீர்!
தர்மயுத்தம் 2 ஆரம்பிக்க போறாரு போல.. என கூறுகிறார் இந்த நெட்டிசன்
|
வசந்த மாளிகையிலே பாத்துட்டோம்
தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர் - ஓபிஎஸ்
இதையெல்லாம் நாங்க வசந்த மாளிகையிலே பாத்துட்டோம், தண்ணிய குடி தண்ணிய குடி.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
போதும்டா சாமி ஆளை விடு..
நான் கோபப்பட்டால் நிறைய உண்மைகள் வெளியே வரும் : ஓபிஎஸ்
இன்னொரு தர்மயுத்தமா...போதும்டா சாமி ஆளை விடு.. என அலறியடித்து ஓடுகிறார் இவர்.
|
வீடியோ கேம்ஸ் விளையாடினாங்களா?
30 வருடமாக அதிமுக வை இயக்கியது சசிகலா குடும்பம் தான்-ஓபிஎஸ்#
அப்போ அம்மா என்ன வீடியோ கேம்ஸ் விளையாடிக்கிட்டு இருந்தாங்கலா! அப்பவும் நீங்க அமைச்சராத்தான இருந்தீங்க அப்பவேவும் ராஜினாமா பண்ணிட்டு போயிருக்கலாமில்ல, என கேட்கிறார் இந்த வலைஞர்
|
தியானம் செய்ய போயிடாதிங்க
நான் கோபப்பட்டால் நிறைய உண்மைகள் வெளியே வரும் : ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு.
தயவுசெய்து கோபப்படுங்கள், தியானம் செய்ய போயிடாதிங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்.