தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய பிரதேசத்தில் போய் ஓட்டு போட சொல்வாங்களோ? தகிக்கும் சோஷியல் மீடியா
நீட் விவகாரம் பற்றி எரியும் நிலையில், அதுகுறித்து நெட்டிசன்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம்.
Recommended Video

சென்னை: 10 மையங்களில் மட்டுமே தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வசதி செய்து கொடுத்துள்ள சிபிஎஸ்இ, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு மாணவ, மாணவிகளில் கணிசமானோரை அனுப்பி வைக்கிறது.
இது தேர்வெழுத உள்ள இளம் பிஞ்சுகளுக்கு மன உளைச்சலையும், அலைச்சலையும் கொடுத்து சோர்வடையச் செய்துவிடும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
நீட் விவகாரம் பற்றி எரியும் நிலையில், அதுகுறித்து நெட்டிசன்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம்.
|
உள்ளாட்சி தேர்தல் இங்கே, ஓட்டு எங்கே
எதுக்கும் கார்பரேஷன் எலக்சனுக்கு முன்னாடி ரெண்டொரு ஹிந்தி வார்த்தைய கத்து வச்சிப்போம்... உன்னோட வார்டுக்கு ஓட்டு மத்தியப் பிரதேசத்தில இருக்கு அங்கே போய் ஓட்ட போட்டுட்டு வான்னு சொன்னாலும் சொல்லுவாங்க...
|
பதற்றம் இருக்குமே
பக்கத்து ஊருல போய் எழுதினாவே நம்ம கிராமத்து பசங்க பயத்துல பாதி மறந்திருவாங்க
கேரளா,ராஜஸ்தான் போய் எழுதினா என்ன தான் பண்ணுவாங்களோ
பாவமப்பா நீட் எழுத ஆசப்பட்டது கூட குத்தமா😯
|
இலங்கை பாணியா?
🎱 தமிழர் நிலங்களைச் சூறையாடல் 🎱 மதத்திணிப்பு 🎱 சிங்கள மயமாக்கல் 🎱 வெட்டுப்புள்ளி வழி பல்கலைகழக அனுமதியில் பாரபட்சம் 🎱 சிறுபான்மை இனங்களுக்குள் பிரச்சனை கிளப்புதல் இவற்றில் இருந்து தம்மைக் காப்பாற்றப் போராட வைத்தல் இதைத்தான் இந்தியாவின் அயல் நாடு செய்கிறது இப்போது இந்தியா
|
ஹிட்லர் கேம்ப்
ஹிட்லரோட கான்சென்ட்ரேஷன் கேம்ப் மாதிரி ட்ரீட் பண்றானுங்க தமிழ்நாட்டை.. டாட். :-///
|
என்ன ஒரு ராஜதந்திரம்
காவேரி இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு குறைக்கப்பட்ட நீரின் அளவை பற்றி யாரும் பேசவிடாதவாறு மேலாண்மையை மட்டுமே பிரச்சனையாக்கி வைத்திருக்கிறார்கள் அதேபோல் NEET தேர்வு ஒரு பிரச்சினையே இல்லாதது போல் தேர்வு மையம் தான் பிரச்சினை என்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார். #BanNeet












Click it and Unblock the Notifications