கருகும் பயிர்களைக் கண்டு மரணிக்கும் விவசாயிகள்... என்ன செய்யப் போகிறது அரசு #StandWithFarmers
வறட்சியால் கருகும் பயிர்களைக் கண்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை 100ஐ தொட்டுள்ளது #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எதெதுக்கோ ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் இளைய தலைமுறையினர், நெட்டிசன்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி #StandWithFarmers என்ற ஹேஸ்டேக் உடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
விவசாயிகளை பாதுகாக்கக் கோரி டுவிட்டரில் பதிவிடப்பட்டு வரும் #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் விவசாயிக்கு ஆதரவான கருத்துக்களை கூறி தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அது பரபரப்பு செய்தியாகிறது. அதுவே விவசாயியின் தற்கொலை கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைய தினம் காலை முதல் மாலை வரை விவசாயிகளின் பிரச்சினைகள், தற்கொலைகளை, பாதிப்புகளை மக்களுக்கு தெரிவிக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி
|
விவசாயிகளின் வியர்வை
நாம் அன்றாடம் உண்ணும் அரிசி விவசாயிகளின் வியர்வையில் விளைவது என்று பதிவிட்டுள்ளார் ராம்குமார் என்ற வலைத்தளவாசி.
|
வேண்டும் ஒரு புரட்சி
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். ஆனால் அது எதுமாதிரியான புரட்சி என்று கூறவில்லை.
|
பணத்தை சாப்பிட முடியாது
இயற்கையை அழிக்கிறோம்... ஆறுகளை பாழாக்குகிறோம். நிலத்தை விஷமாக்குகிறோம். இதனாலேயே மழை குறைந்து விவசாயம் அழிகிறது. பணத்தை சாப்பிட முடியாது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
வறண்டே கிடக்கிறது
கடந்த ஆண்டு வெள்ளம், இந்த ஆண்டு வறட்சி, தமிழக விவசாயிகளின் வயலும், வயிறும் வறண்டு கிடக்கிறது பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். விவசாயிகளின் தற்கொலையும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications