தமிழகத்தில் மற்றொரு தேர்தல் கூட்டணி.. பார்வர்ட் பிளாக் தலைமையில் உதயமானது சிங்க கூட்டணி
தேனி: 'சிங்க கூட்டணி' என்ற பெயரில் முக்குலத்து கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளன. இதை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏவும், பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளருமான கதிரவன் தெரிவித்தார்.
இதுகுறித்து உசிலம்பட்டியில் இன்று அவர் அளித்த பேட்டி: அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளோம்.

இக்கூட்டணிக்கு, 'சிங்க கூட்டணி' என்று பெயரிட்டுள்ளோம். இக்கூட்டணியிலுள்ள கட்சிகள் சிங்கம் சின்னத்தில் போட்டியிட உள்ளன. இவ்வாறு கதிரவன் தெரிவித்தார்.
இம்மூன்று கட்சிகளுமே அதிமுகவோடு கூட்டணி வைக்க முயன்று, ஜெயலலிதா சீட் தராததால் ஏமாற்றமடைந்தவையாகும். முக்குலத்தோர் வாக்குகளை நம்பி இவை கூட்டணி அமைத்துள்ளதாக கருதப்படுகிறது. எனவே தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகள் சிதறும் என்ற அச்சம் அதிமுகவுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications