கோவை அருகே 36 லட்சம் பணம் பறிமுதல்... எல்லாமே ரூ.2000 நோட்டுகள்
கோவை அருகே காரில் எடுத்து வரப்பட்ட 36 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முழுவதும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
அவினாசி: கோவை அருகே அவினாசியில் இருந்து காரில் எடுத்து வரப்பட்ட 36 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முழுவதும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.
கோவை அருகே அதிகளவு கணக்கில் வராத பணம் காரில் எடுத்து செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெருமாநல்லூரில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக அந்த வழியாக வந்த ஒரு காரை போலிசார் மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர். அதில் 36 லட்சம் ரூபாய் பணம் இருப்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்தப் பணம் முழுவதும் 2000 ரூபாய் நோட்டு கட்டுகளாய் இருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும் புதிய ரூபாய் நோட்டுகளை பெறவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய நோட்டுகளாக இவ்வளவு பணம் எப்படி வந்தது என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications