போன வாரம் விலையை குறைத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு
இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video
சென்னை: இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு விடிவுகாலம் பிறக்காது போலவே தெரிகிறது. தினமும் 50 பைசா வீதம் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர தொடங்கி உள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
[இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!]
இப்போது என்ன விலை
இந்த நிலையில் நேற்று 15 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்தது. இன்றும் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 31 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.26 காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 78.04 காசுகளாக விற்கிறது.
மேலும் உயரும்
அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து பெட்ரோல் விலை உயரும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் வரிவிதிப்பு முறையும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மற்ற இடங்களில்
மும்பையில் மீண்டும் பெட்ரோல் விலை 90 ரூபாய நெருங்கி வருகிறது. அங்கு பெட்ரோல் விலை 88.01 ரூபாயாக உள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 82.03 ரூபாயாக உள்ளது. இந்தியாவிலேயே மும்பையில்தான் பெட்ரோல் விலை அதிகம் விற்கிறது.
ஏன் குறைத்தார்கள்
இதே வேகத்தில் பெட்ரோல் விலை ஏறினால் இன்று மூன்று நாட்களில் பழைய விலையை எட்டிவிடும். அதாவது மத்திய அரசு குறைத்த போது இருந்த விலையை மீண்டு எட்டிவிடும். இதற்கு பெட்ரோல் விலையை குறைக்காமலே இருந்திருக்கலாம் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.