வருகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை.. 26, 27 முதல் மீண்டும் கனமழை?
சென்னை: வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இ்தன் காரணமாக அடுத்த இரு நாட்களில் நல்ல மழையையும், அதற்கு அடுத்த இரு நாட்களுக்கு கன மழையையும் எதிர்பார்க்கலாம் என்றும் ரமணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உருவாகும்பட்சத்தில் 26, 27 ஆகிய தேதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்க முடியும். மேலும் 29,30 ஆகிய தேதிகளில் கன மழையையும் எதிர்பார்க்கலாம்.
சென்னையைப் பொறுத்தவரை 25ம் தேதி் முதல் இரு நாட்களுக்கு மழை இருக்க வாய்ப்பில்லை. வானம் தெளிவாக காணப்படும். வரும் நாட்களில், புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையின் போக்கைப் பொறுத்து மழையை எதிர்பார்க்கலாம் என்றார் ரமணன்.












Click it and Unblock the Notifications