வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்.. கன மழை வரும்... வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வருவதால் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த மாத முடிவு வரை பருவ மழைக்காலம் உள்ளது. ஆரம்பத்தி்ல் மாநிலம் முழுதும் மழை வெளுத்துக்கட்டியது. இருப்பினும் பின்னர் மழை கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆரம்பித்தது.வடக்கிலும், தெற்கிலும் மாறி மாறிப் பெய்து வந்தது.

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை இல்லை. தென் மாவட்டங்களிலும் மழை பெரிதாக இல்லை.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் கடலோர மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் வழக்கமான வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொருத்தமட்டில் வானம் பிரகாசமாக காணப்படும். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. ஆகையால் 3 நாட்கள் திட்டமிட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுவது குறித்து அதன் இயக்கத்தை வைத்துதான் சொல்ல முடியும்.
நேற்று வரையிலான நிலவரப்படி இந்த பருவ காலத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 42 செ.மீ. அளவுக்கு தமிழகத்தில் பெய்துள்ளது. இது வழக்கமாக பதிவாகும் மழையை விடவும் 2 சதவீதம் குறைவு. வரும் நாட்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
-
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications