ராம்குமார் பிரேத பரிசோதனை குறித்து உயர்நீதிமன்றத்தில் புதிய மனு!
சென்னை: ராம்குமார் பிரேத பரிசோதனை குறித்து அவரது தந்தை சார்பில் புதிய மனு ஒன்றை இன்று வழக்கறிஞர் சங்கர சுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனால் ராம்குமாரின் பிரேத பரிசோதனை தாமதமாகி வருகிறது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரின் தற்கொலை மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருவதால் அவரது தந்தை சார்பில் பிரேத பரிசோதனை குறித்து புதிய மனு ஒன்றை வழக்கறிஞர் சங்கர சுப்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், பிரேத பரிசோதனையின் போது, தங்களது மருத்துவர் சம்பத் இருக்க வேண்டும் என்றும், தடயவியல் நிபுணர் ஒருவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்குத்தான் விசாரணைக்கு வர உள்ளது. எனவே, அதன் பிறகுதான் ராம்குமார் பிரேத பரிசோதனை எப்போது நடக்கும் என்ற விவரம் தெரிய வரும். இதனால் இன்று காலை தொடங்க இருந்த ராம்குமார் பிரேத பரிசோதனை தாமதமாகி வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்த பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுவாதியின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரே ஒருவர் ராம்குமார்தான். அவரை எவ்வளவு பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். திடீரென ஏற்பட்டுள்ள அவரது மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தங்களது மருத்துவரான சம்பத் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய மரணங்களின் பிரேத பரிசோதனையின் போது தடயவியல் நிபுணர் ஒருவர் கண்டிப்பாய் உடன் இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி தடயவியல் நிபுணர் ஒருவரும் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications