தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் முடிந்தது... சரி, 'கரெண்டு' எப்போ வரும்?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி தெர்மல் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல்மின் நிலையத்தில் உள்ள 2 புதிய யூனிட்டுகளிலும் சோதனையோட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளதையடுத்து, விரைவில் அங்கு மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

தூத்துக்குடி தெர்மல் நகரில் தலா 500 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள 2 யூனிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி அனல் மின் நிலையமும் இணைந்து இந்த அனல் மி்ன் நிலையத்தை அமைந்துள்ளன.

இந்த திட்டத்திற்கு மத்திய நிலக்கரி துறை அமைச்சகமும், மத்திய மின் துறை அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளன. தொடர்ந்து தூத்துக்குடியில் ரூ.4910 கோடி மதிப்பீட்டில் அனல் மின நிலையம் அமைக்க மத்திய அரசு நிர்வாகம் அனுமதி அளித்தது.

கட்டுமானப் பணிகள்...

திட்ட மதிப்பில் 89 சதவீதத்தை என்எல்சி நிர்வாகமும், 11 சதவீதத்தை தமிழ்நாடு மின்வாரியமும் அளிக்க ஓபபந்தம் கையெழுத்தானது. இதையடுத்து புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான கட்டுமானப் பணிகள் 2008ல் துவங்கி தற்போது முடிவடையும் நிலையில் உளளன.

புகை போக்கி...

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து என்டிபிஎல் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி நேரடியாக வரும் வகையில் கன்வெயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு யூனிட்டுகளிலும் நவீன பாய்லர்கள் மற்றும் 275 மீட்டர் உயரம் கொண்ட புகை போக்கி அமைக்கப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டம் வெற்றி...

மேலும் நிர்வாக அலுவலக கட்டிடங்கள், ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகதள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் யூனிட்டில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. இநத யூனிட்டில் மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் 3 கட்டமாக வெற்றிக்கரமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

மின் உற்பத்தி தொடக்கம்...

அடுத்த கட்டமாக ஸ்டீம் டர்பைன் சோதனை ஓட்டம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரியில் இங்கு மின் உற்பத்தி துவங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மே மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்த மாதம் துவங்கும் என தெரிகிறது.

மின்வெட்டிற்கு தீர்வு...

புதிய அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் மின் உற்பத்தி துவங்கினால் தமிழகத்திற்கு 194 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். 2வது யூனிட்டிலும் மின் உற்பத்தி துவங்கும் போது 387 மெகா வாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு பிரச்சனை குறையும். முதல் யூனிட்டில் இறுதிகட்ட சோதனை நடத்த பின்னர் மின் உற்பத்தி துவங்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+