சென்னை வாழ்க்கை பிடிக்கவில்லை – மணமான 6 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வாழ்க்கை பிடிக்காத காரணத்தால் புதியதாக மணமான இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புச்சிநாயக்கன் மெயின் ரோட்டில் வசிப்பவர் பிரபு இவர் ஒரு டெய்லர். இவரது மனைவி சுகன்யா . இருவருக்கும் 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது.

கடலூரிலேயே வசித்து வந்த சுகன்யாவுக்கு சென்னையில் வசிக்க பிடிக்கவில்லை எனக் கூறிவந்துள்ளார். இந்நிலையில், சுகன்யா 3 மாத கர்ப்பமாக இருந்தார். அவரை பார்க்க சில நாளுக்கு முன் பெற்றோர் வந்தனர்.

அவர்களிடம் சுகன்யா, நானும் கடலூருக்கு வந்துவிடுகிறேன் எனக்கு சென்னை பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று பெற்றோர் அறிவுரை கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சுகன்யா, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.பி.சத்திரம் போலீசார் சுகன்யாவின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+