திருமணமாகி 6 மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை
கோவையில் திருமணமாகி ஆறு மாதத்தில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: திருமணமாகிய 6 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கோவை மலுமிச்சம்பட்டியில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மலுமிச்சம்பட்டியில் வசித்து வருபவர் கெளதம் குமார். இவர் சிவில் இன்ஜினியர் படிப்பை முடித்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கோவை செல்வபுரத்தை சேர்ந்த அஸ்வினி சாரதாம்பாள் (22) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து விடுமுறையில் கெளதம் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனிடையே, கணவன் மனைவிக்கு இடையே செவ்வாய்க்கிழமை குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டில் தனியாக இருந்த போது அஸ்வினி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமாகி ஆறு மாதங்களே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும் காவல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications