சென்னை அருகே திருமணமான 7 நாட்களுக்குள் தூக்கில் தொங்கிய இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமுல்லைவாயலில் திருமணமான 7 நாட்களுக்குள் இளம்பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூரைச் சேர்ந்தவர் ரம்யா(24). அவருக்கும் திருமுல்லைவாயலைச் சேர்ந்த வீரராகவன்(35) என்பவருக்கும் கடந்த 9ம் தேதி திருமணம் நடந்தது. வீரராகவன் படங்களில் லைட் பாயாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ரம்யா தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். பின்னர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாகியும் ரம்யா அறையை விட்டு வெளியே வராததால் அவரது மாமனார், மாமியார் கதவை தட்டினர். ஆனால் ரம்யா கதவை திறக்காததால் அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரம்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரம்யா சாகும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+