தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ''தமிழகத்தை பொருத்தவரை வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே, ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 101.12 டிகிரி பாரன்ஹீட், சென்னையில் 96.98 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை கன மழை பெய்தது. இதனால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.