சென்னையில் மியான்மர் அகதிகள் துன்புறுத்தலா? தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: மியான்மர் அகதிகள் சென்னையில் தங்க இடமின்றி அலைக்கழிக்கப் பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தேசியமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிரியாவிலிருந்து தப்பி வந்த குடும்பம் ஒன்று துருக்கி கடல் பகுதியில் அலைகளில் சிக்கி பலியானது. இதில் சிறுவன் அய்லான் கடற்கரையில் பாதி புதைந்த நிலையில் கிடந்த புகைப்படம் உலக நாடுகளை உலுக்கியது. அதனைத் தொடர்ந்து அகதிகளுக்கு அடைக்கலம் தர ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அனுமதி தந்துள்ளன.
இந்நிலையில், சென்னையில் மியான்மர் அகதிகள் தங்க இடமின்றி அலைக்கழிக்கப் பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமே முன் வந்து விசாரணை செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸ் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.