திருப்பூரில் பெண்கள் மீது போலீஸ் தடியடி.. தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
திருப்பூர் மாவட்டத்தில பெண்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில பெண்கள் மீது போலீஸார் நடத்திய தடியடி தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று நேற்று தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்தது.

பெண்ணை ஓங்கி அறைந்ததற்கு தமிழகம் முழுவதும் ஏடிஎஸ்பி-க்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் பாண்டியராஜன் மீது உயர் நீதிமன்றத்தில வழக்கும் தொடுக்கப்பட்டது.
தகவலறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் போலீஸார் தடியடி குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை டிஜிபி ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக வரும் 2 வாரங்களுக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications