தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் 24 குழந்தைகள் பலி- தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
சென்னை: தருமபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் 24 பச்சிளம் குழந்தைகள் பலியானது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 குழந்தைகளும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 குழந்தைகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்தன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றன.
மொத்தமாக இதுவரை 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் டி.முருகேசன் அனுப்பி உள்ள நோட்டீஸில், ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் அவை உண்மை என்னும் பட்சத்தில் அது மிகவும் தீவிரமான மனித உரிமை மீறலாக கருதப்படும்; இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவ துறையின் முதன்மை செயலாளர், தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் 4 வாரங்களுக்குள் விரிவான ஒரு அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications