தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் 24 குழந்தைகள் பலி- தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
சென்னை: தருமபுரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் 24 பச்சிளம் குழந்தைகள் பலியானது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 குழந்தைகளும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 குழந்தைகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்தன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வருகின்றன.
மொத்தமாக இதுவரை 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் டி.முருகேசன் அனுப்பி உள்ள நோட்டீஸில், ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் அவை உண்மை என்னும் பட்சத்தில் அது மிகவும் தீவிரமான மனித உரிமை மீறலாக கருதப்படும்; இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவ துறையின் முதன்மை செயலாளர், தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் 4 வாரங்களுக்குள் விரிவான ஒரு அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications