ஐடிக்கு 'கிடைத்த' தகவல்படி ராமமோகன் ராவ் வீட்டில் ரெய்டு- மத்திய அரசு விளக்கம்
வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்கள்படி ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ரூ170 கோடி ரொக்கம், 131 கோடி தங்கம்.... இவை கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் சிக்கியவை. இவை அனைத்தும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சொந்தம் எனவும் கூறப்பட்டது.
சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. சேகர் ரெட்டி எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகாவிலும் இச்சோதனை நடைபெறுகிறது.

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில்தான் சோதனை நடைபெறுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications