மொழிபெயர்ப்புக்கு தனி பல்கலை கழகத்தை உருவாக்க வேண்டும்:மோடி கவிதை நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து
மொழிபெயர்ப்புக்கு தனி பல்கலைக் கழகத்தை உருவாக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: மொழிபெயர்ப்புக்கு தனியாக் ஒரு பலகலைக் கழகத்தை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தி மொழியில் எழுதிய கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிந்தனை களஞ்சியம் என்ற பெயரிலான இந்த மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய வைரமுத்து, தாய் மொழியான குஜராத்தியில் பிரதமர் மோடி கவிதைகளை எழுதியிருப்பதால் அவர் மீதான மதிப்பு கூடியுள்ளது.
இந்த நூலில் மதத்தைவிட அரசியலைவிட மனிதாபிமானம் மேலோங்கி இருக்கிறது. மொழிகளில் தேர்ந்த சொற்கள் உருவாக மொழிபெயர்ப்புக்கு என ஒரு தனி பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், கவிதைகளில் வெளிப்படுத்தும் மென்மைத்தன்மைதான் பிரதமர் மோடியின் குணம். இந்த நூலின் மூலம் பிரதமர் மோடியின் உள்ளச் சிந்தனையை உணர்ந்து கொள்ள முடியும் என பேசினார்.
மோடியின் குஜராத்தி மொழி கவிதைகளை சமஸ்கிருத மொழி பேராசிரியர் ராஜலஷ்மி சீனிவாசன் மொழிபெயர்த்துள்ளார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications