ரத்தம் கக்கி சாவாங்க? இந்து விரோதிகளுக்கு சண்டி ஹோம தண்டனை: நித்யானந்தா 'மைனர்' சீடர்கள் எச்சரிக்கை
இந்து விரோதிகளை தண்டிக்க சண்டி ஹோமம் நடத்துவோம் என நித்யானந்தாவின் மைனர் சீடர்கள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை விமர்சித்தவர்கள் மற்றும் இந்து மதத்துக்கு எதிரானவர்களுக்கு சண்டி ஹோமம் மூலம் தண்டனை அளிப்போம் என அவரது மைனர் சீடர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டாள் விவகாரத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் என கூறிக் கொள்ளும் சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

ஆனாலும் நித்தியானந்தாவின் மைனர் சீடர்கள் அடங்குவதாக இல்லை. தினந்தோறும் ஆபாச அர்ச்சனைகளுடன் வன்முறையை தூண்டும் வகையிலான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்து மத விரோதிகள், நித்தியானந்தா கொடும்பாவி எரித்தவர்களுக்கு மைனர் சீடர்கள் சாபம் கொடுக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தாங்கள் சண்டி ஹோமம் நடத்தப் போகிறோம்.. இந்து மத விரோதிகளுக்கு என்ன ஆகப் போகிறது என பாருங்கள் என மைனர் சீடர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பல நூறு சிறுவர்கள் சீடர்களாக இருக்கின்றனர்; அவர்களை மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கர்நாடகா அரசை வலியுறுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications