தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே: திருமாவளவன்
நாகர்கோவில்: தேமுதிகவுடன் கூட்டணி இல்லை மாறாக தொகுதி பங்கீடு தான் வைத்துள்ளோம் என மக்கள் நலக் கூட்டணி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க திமுகவும், பாஜகவும் முயற்சி செய்து தோற்றுவிட்டன. ஆனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்து தேமுதிகவை தங்கள் பக்கம் இழுத்துவிட்டனர்.

இந்நிலையில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு வந்த பிறகு கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் நாகர்கோவிலில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் கலந்து கொண்டார்.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் அதன் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன் கூறுகையில்,
நாங்கள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவில்லை, தொகுதி பங்கீடு மட்டுமே வைத்துள்ளோம் என்றார்.
வைகோ கூறுகையில்,
சிறிதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications