For Daily Alerts
Just In
மாஜி நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் கிடையாது.. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
கோவையில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கோவை: கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் நேற்று இரவு கோவையில் கைது செய்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடன் கர்ணன் தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில், கோவையில் இருந்த கர்ணனை கொல்கத்தா போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
அவரை விடுவிக்க வேண்டும் என்று கர்ணனின் வழக்கறிஞர் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர்.
Comments
English summary
The Supreme Court has refused to grant bail to Justice C S Karnan. The former judge of the Calcutta High Court was arrested on Tuesday.