ஒரூ பஸ்கூட ஓடலியே... மணப்பாறை மக்கள் நிலைமையைப் பாருங்க! - வீடியோ
திருச்சி மணப்பாறையில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் சுற்று வட்டார கிராம மக்கள் வெகுவாக பாதிகப்பட்டனர்.
திருச்சி: திருச்சி மணப்பாறையில் ஒரு அரசு பேருந்து கூட இயக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பேருந்து நிலையத்தில் ஒரு அரசு பேருந்து கூட கண்ணில்படவில்லை.
திருச்சி மாநகரம் தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதால், இங்கிருந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் திருச்சி பேருந்து நிலையம் காலியாக உள்ளது.

இந்நிலையில் திருச்சி மணப்பாறையில் 90 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்பாடாத காரணத்தால் அங்கும் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆனால் வராத பேருந்துக்கு மக்கள் காத்துக்கொண்டு இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மணப்பறை நகரத்தைச் சுற்றி நிறைய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்து மக்கள் தங்களது எல்லா தேவைகளௌக்கும் மணப்பாறை தான் வந்து செல்ல வேண்டும்.
இன்று அரசு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் வேலைநிறுத்த செய்தி தெரியாமல் பேருந்து நிலையத்துக்கு வந்த மக்கள் பேருந்துக்காக மணிக்கணக்காக காத்து நின்றனர். ஆனால் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் மக்கள் படும் அவஸ்தைக்கு ஆளாகினர்.












Click it and Unblock the Notifications