அதிமுக கோஷ்டிகள் பேச்சு இன்று நடைபெற வாய்ப்பு இல்லை: செம்மலை
சென்னை: அதிமுக கோஷ்டிகள் பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்பு இல்லை என ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இன்று பேச்சு வார்த்தை நடத்தும் என தகவல் வெளியானது. இதுதொடர்பாக நேற்றிரவு ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல் சிவி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர்.
இன்று நல்ல நாள் என்பதால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அமைச்சர் சிவி.சண்முகம் கூறினார். ஆனால் இன்று இரு அணிகளும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை என ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏவான செம்மலை கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்த நல்ல சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications