மதிமுக- பாஜக இடையே கூட்டணியில் பிரச்சனை இல்லை: இல. கணேசன் விளக்கம்

சென்னையில் நாளை நடைபெறும் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியின் பொதுக்கூட்டத்தில் முதலில் மதிமுக பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் வைகோ கலந்து கொள்ளமாட்டார்.. அவரது கட்சித் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே திமுகவுடன் பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாலேயே வைகோ, மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சென்னையில் இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நாளைய மாநாட்டில் மதிமுகவின் பிரதிநிதி பங்கேற்பது வரவேற்கத்தக்கது.
அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் கூட்டத்தில் வைகோவும் கலந்து கொள்வார். இதர கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்காததால் நாளைய கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ளவில்லை.
வீண் சர்ச்சைகளைத் தவிர்க்கவே நாளைய கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறு இல. கணேசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications