விரலில் வைக்க மை இல்லை.. கியூல நின்னாலும் பணம் இல்லை.. என்ன பண்றதுன்னு புரியல
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியில் நீண்ட வரிசையில் நிற்கும் போது விரலில் வைக்கப்படும் மை தீர்ந்துவிட்டதால் பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் வெறும் கையோடு வீடு திரும்பினர்.
சென்னை: செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்று நீண்ட வரிசையில் நின்ற மக்கள் கை விரலில் வைக்கப்படும் அழியாத மை தீர்ந்து விட்டதால் பணத்தை மாற்ற முடியாமல் வெறும் கையோடு வீடு திரும்பினர்.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றி வருகின்றனர். ஒருவரே மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு சென்று பணத்தை மாற்றாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஓட்டுப் போடும் போது விரலில் வைக்கப்படும் அழியாத மையை விரலில் வைக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்தது.

இதுதொடர்பான அறிவிப்பு வந்த உடன் வங்கிகள் வாடிக்கையாளர்களின் கையில் மை வைக்க தயாரானது. ஆனால் மைதான் வங்கிகளுக்கு வந்து சேரவில்லை. இதனால் வங்கிகள் பழைய நோட்டுக்களை மாற்றுவதை நிறுத்தியது. பணத்தை மாற்ற வங்கிகளுக்கு வரும் மக்களிடம் மை இன்னும் வரவில்லை. அதனால் பணத்தை மாற்ற முடியாது என்று திரும்பி அனுப்பியது.
மை வந்து சேர்ந்த ஒரு சில வங்கிகளில் மட்டும் மை வைக்கப்பட்டு பணம் மாற்றப்பட்டது. அந்த வங்கிகளிலும் குறைவாகவே மை வந்ததால் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மை வைத்து பணம் மாற்றத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. இதனால் நீண்ட வரிசையில் நின்றவர்கள் பணம் கிடைக்காமல் வெற்றுக் கையோடு வீடு திரும்பினார்கள்.
இதுபோன்ற நேரங்களில் பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு செல்லுங்கள். பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என்று பொதுமக்களிடம் வங்கிகள் அறிவுறுத்துகின்றன. என்றாலும் அன்றாட செலவிற்காகத்தான் பணத்தை மாற்ற மக்கள் வங்கிக்கு வருகின்றனர் என்பதால் புலம்பிக் கொண்டே அவர்கள் வீடு திரும்பினர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications