தமிழகமும் ஆங்கிலோ இந்தியர் நியமன எம்.எல்.ஏ. முறையை ரத்து செய்தது
சென்னை: மத்திய அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் தமிழக சட்டசபையில் ஆங்கிலோ இந்தியர் நியமன எம்.எல்.ஏ. முறை ரத்து செய்யப்பட்டது.
நாடு முழுவதும் நியமன எம்.எல்.ஏ, எம்.பிக்களாக ஆங்கிலோ இந்தியர் நியமிக்கப்பட்டு வந்தது நடைமுறையில் இருந்து வந்தது. இதனை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது.

இதனடிப்படையில் தமிழக சட்டசபையிலும் ஆங்கிலோ இந்தியர் நியமன எம்.எல்.ஏ. முறையை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அப்போது பேசிய ஆங்கிலோ இந்தியர் நியமன எம்.எல்.ஏ, நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ், இம்முடிவானது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. 70 ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்தது ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
தேசத்தின் பல்வேறு துறைகளில் ஆங்கிலோ இந்தியர்கள் அளப்பரிய பங்களிப்பை செய்திருக்கின்றனர் என்றார். இதனைத் தொடர்ந்து இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications