துடைப்பத்தை கொண்டுட்டு வராதீங்க… ஆம் ஆத்மி கட்சியினரிடம் கூறும் கிராமத்தினர்
தேனி: ஆம் ஆத்மி கட்சியினரின் துடைப்பம் சின்னத்தைக் கண்டு தமிழகத்தில் கிராமபுற மக்கள் மிரட்சி அடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட இந்திய கட்சியான ஆம் ஆத்மி கட்சி சார்பில் தமிழ்நாட்டிலும் லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நகர்புறவாசிகளுக்கு ஆம் ஆத்மியின் கட்சி சின்னம் தெரிந்திருந்தாலும், கிராமபுறத்தை சேர்ந்த பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் கிராம பகுதியில் பிரசாரத்திற்கு செல்லும் போது துடைப்பத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேனி லோக்சபா தொகுதியில் பெரும்பாலும் கிராமபுற பகுதியை கொண்டது.இப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பெரியவர்கள் ஆம் ஆத்மி கட்சியினரை பார்த்தால் முகத்தை சுழித்து,ஒதுங்க வேண்டிய நிலையிலே உள்ளது.
திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு செல்பவர்கள் இவர்களை பார்த்தால் அபசகுனமாக நினைத்து திரும்பி சென்று விடுகின்றனராம். எனவே ஆம் ஆத்மி கட்சியினரே தங்களது சின்னத்தை கையில் எடுத்துசென்றால் வரவேண்டிய வாக்குகள் வராமல் போகுமோ என்று தயக்கம் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications