ஓசிப் பட்டாசு கேட்டு வராதீங்கப்பா...பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அதிரடி
சிவகாசி: சிவகாசி பகுதியைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பத்திரிக்கையில் செய்துள்ள விளம்பரம் அரசு அதிகாரிகள் மட்டத்தில் பெரும் தர்மசங்கடத்தையும், டென்ஷனையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஓசி பட்டாசு கேட்டு வர வேண்டாம் என்றும், இலவச பட்டாசுகளைத் தர மாட்டோம் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதை விட முக்கியமாக, தொழில் பாதிப்பால் மன உளைச்சலில் உள்ள என்றும் அவர்கள் விளம்பரத்தில் சொல்லியிருப்பது அரசு அதிகாரிகளை நெளிய வைத்துள்ளது.
அந்த வில்லங்க விளம்பரம் குறித்த விவரம் இதோ...

ஓசி பட்டாசு பண்டல் பிளீஸ்...
ஆண்டுதோறும் தீபாவளி நெருங்கும்போது தங்களது உயர் அதிகாரிகளுக்கு ஐஸ் வைக்கும் வகையில், பட்டாசு பண்டல்களைக் கொடுத்து வாழ்த்து தெரிவிப்பது அதிகாரிகளின் வழக்கமாக உள்ளது.

ப்ரீயா கொடு ப்ரீயா கொடு மாமு...
இதற்காக சிவகாசியில்தான் அவர்கள் குண்டைப் போடுவார்கள். இத்தனை பட்டாசு பண்டல்களை அனுப்புமாறு அவர்கள் உத்தரவு போடுவார்கள். கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பது கொடுக்காப்புளி சாப்பிடும் வயது உடைய சின்னப் பசங்க முதற்கொண்டு அத்தனை பேருக்கும் தெளிவாகத் தெரியும்.

இலவசத்தால் ஓய்ந்து போன பட்டாசு ஆலைகள்
அதிகாரிகளால் பிரச்சினை வரக் கூடாதே என்பதற்காக அவர்களுக்கு ஆண்டு தோறும் இலவசப் பட்டாசுகளை அனுப்பி வைப்பது பட்டாசு ஆலைகளின் வழக்கமாகும்.

யார் யாரு...
இப்படி ஓசிப் பட்டாசு வாங்குவோரில் முதல் இடத்தில் இருப்பவர்கள் வருவாய்த்துறையினர் என்று சொல்கிறார்கள். அடுத்து காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், தொழிலாளர் நலத்துறையினர், வணிகவரித்துறையினர், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் என்று வரிசையாக ஓசி பட்டாசு வாங்குவார்களாம்.

ஜீப் ஜீப்பாக
அலுவலக ஜீப்களை எடுத்துக் கொண்டு இந்த ஓசி பட்டாசுகளை வாங்க அதிகாரிகள் பட்டாசு ஆலைகளுகளுக்கு ஆட்களை அனுப்பி பட்டாசு பார்சல்களை வாங்கி வருவது வழக்கமாம்.

பத்திரிக்கையில் போட்டுட்டாங்களே...
ஆனால் இப்போது பட்டாசு ஆலை அதிபர்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த இலவசத்துக்கு திடீர் தடை போட்டுள்ளனர். அதாவது பத்திரிக்கையில் விளம்பரம் செய்து அதிரடியாக நடவடிக்கையில் குதித்துள்ளனர்.

இந்த ஆண்டு இலவச பட்டாசு கேட்க வேண்டாம்....
இப்படி ஒரு தலைப்பில் அந்த பத்திரிக்கை விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது...

பல சிரமம் -நெருக்கடி
பட்டாசு தொழில் பல்வேறு சிரமங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. உற்பத்தி குறைந்துவிட்டது.

மன உளைச்சலில் இருக்கிறோம்
இதனால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடும் மன உளைச்சலில் இருக்கின்றனர். பட்டாசு மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. இது இலவசமாகவோ மானிய விலையிலோ கிடைப்பது இல்லை.

புரிஞ்சுக்குங்கப்பா.. ப்ளீஸ்.. நன்றி வணக்கம்
எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையை புரிந்துகொண்டு அனைத்துத் துறை அதிகாரிகள், உற்றார் உறவினர்கள் யாரும் இலவச பட்டாசு கேட்டு எங்கள் மனதை புண்படுத்த வேண்டாம்.... நன்றி வணக்கம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மன உளைச்சல்...
இப்படிக்கு தொழில் பாதிப்பால் மன உளைச்சலில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கள் என்று கீழே போட்டுள்ளனர்.

மானம் போயிருச்சே.. மாப்ளே...
இந்த விளம்பரம் அரசு அதிகாரிகள் மட்டத்தில் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாம். மானம் போயிருச்சே என்ற புலம்பலை கேட்க முடிகிறதாம்....
இந்த விளம்பரத்திற்காக என்ன மாதிரியான ஆப்டர்ஷாக்குகளை சந்திக்கப் போகிறார்களோ பட்டாசு ஆலை அதிபர்கள்.. இது மக்களின் மைன்ட் வாய்ஸ்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications