நீட் தேவையில்லை... கோவையில் கொந்தளித்த பெற்றோர்கள் மாணவர்கள்!
கோவை: நீட் தேர்வு தேவையில்லை என்றும் மாநில அரசின் மருத்துவக்கலந்தாய்வு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில்தான் நடக்கவேண்டும் என்று வலியுறுத்தி, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு நீட் தேர்வு என்பதன்மூலம் பெரும் எதிர்கால நெருக்கடியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என்று கூறி மாநிலம் முழுக்க ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசு தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். என்றும் போராட்டத்தில் கலந்துகொணடவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த பெற்றோர்கள், " 20 நாள் இடைவெளியில் 2 ஆண்டு சிபிஎஸ்இ பாடங்களை படித்துவிட்டு நீட் தேர்வை எழுத மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது.
கடந்த 3 மாதங்களாக தமிழர்கள், வீட்டில் நிம்மதி இல்லை. வாழ்க்கையின் கனவான மருத்துவப்படிப்பு நிறைவேறாமல் போய்விட்டதே என்று ஒவ்வொரு பிளஸ் மாணவனும் மாணவியும் உணவில்லாமல் தவித்து வருகிறார்கள். மருத்துவ மாணவர் சேர்க்கை மாநில அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில்தான் நடக்கவேண்டும்.
இதெல்லாம் மத்திய அரசுக்கு தெரியாது. அதனால் உடனடியாக நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர தீர்வு வழங்கவேண்டும். மாநில அரசின் தொடர் வலியுறுத்தலால் தற்காலிக விலக்கு கொடுத்துள்ளது மத்திய அரசு. அதற்காக நன்றி. ஆனால் தேவை நிரந்தர விலக்கு." என்று வலியுறுத்தினர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications