வேட்பு மனு தாக்கல்.. இன்றும், நாளையும் லீவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், நாளை உகாதி தினம் என்பதாலும், இரு நாட்களும் வேட்பு மனு தாக்கல் நடைபெறாது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 24ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில் 2ம் நாளா இன்று ஞாயிற்றுக்கிழமை. எனவே இன்று வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை. அதேபோல நாளை உகாதி எனப்படும் கன்னட, தெலுங்குப் புத்தாண்டு தினமாகும். எனவே நாளையும் அரசு விடுமுறை என்பதால் நாளையும் வேட்பு மனு தாக்கல் கிடையாது.
எனவே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் வழக்கம்போல் பெறப்படும். ஏப்ரல் 5ம் தேதிதான் மனுத் தாக்கலுக்குக் கடைசி நாளாகும். மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாளாகும்.












Click it and Unblock the Notifications