உள்ளாட்சி இடைத் தேர்தல் ஏற்பாடுகள் தயார்: நோட்டாவுக்குப் பதில் "கவுண்டமணி"!
சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்தத் தேர்தலில் நோட்டாவுக்குப் பதில் 49 ஓ படிவம் வழங்கப் படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள், 4 நகராட்சி தலைவர்கள், 6 பேரூராட்சி தலைவர்கள், 8 மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 39 பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட காலியாக உள்ள 530 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பூத் சிலிப்புகள் வழக்கும் பணி முடிவடைந்து விட்டது. பூத் சிலிப் கிடைக்கப் பெறாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவை வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ளிட்ட 14 வகையான புகைப்பட ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் 5 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்களில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் ‘நோட்டா' பொத்தான் வசதி இல்லை. எனவே ‘நோட்டா' பயன்படுத்த விரும்புகிறவர்கள் 49 ஓ படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தேர்தலில் மொத்தம் 1,486 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகளும் களம் இறங்கி உள்ளன. தி.மு.க. உள்பட மற்ற கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. பிற்பகல் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications