உள்ளாட்சி இடைத் தேர்தல் ஏற்பாடுகள் தயார்: நோட்டாவுக்குப் பதில் "கவுண்டமணி"!
சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்தத் தேர்தலில் நோட்டாவுக்குப் பதில் 49 ஓ படிவம் வழங்கப் படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள், 4 நகராட்சி தலைவர்கள், 6 பேரூராட்சி தலைவர்கள், 8 மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 39 பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட காலியாக உள்ள 530 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பூத் சிலிப்புகள் வழக்கும் பணி முடிவடைந்து விட்டது. பூத் சிலிப் கிடைக்கப் பெறாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவை வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ளிட்ட 14 வகையான புகைப்பட ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் 5 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்களில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் ‘நோட்டா' பொத்தான் வசதி இல்லை. எனவே ‘நோட்டா' பயன்படுத்த விரும்புகிறவர்கள் 49 ஓ படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தேர்தலில் மொத்தம் 1,486 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகளும் களம் இறங்கி உள்ளன. தி.மு.க. உள்பட மற்ற கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. பிற்பகல் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications