உள்ளாட்சி இடைத் தேர்தல் ஏற்பாடுகள் தயார்: நோட்டாவுக்குப் பதில் "கவுண்டமணி"!
சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்தத் தேர்தலில் நோட்டாவுக்குப் பதில் 49 ஓ படிவம் வழங்கப் படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்கள், 4 நகராட்சி தலைவர்கள், 6 பேரூராட்சி தலைவர்கள், 8 மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 39 பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட காலியாக உள்ள 530 உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பூத் சிலிப்புகள் வழக்கும் பணி முடிவடைந்து விட்டது. பூத் சிலிப் கிடைக்கப் பெறாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ் போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் ஆகியவை வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ளிட்ட 14 வகையான புகைப்பட ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் 5 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்களில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் ‘நோட்டா' பொத்தான் வசதி இல்லை. எனவே ‘நோட்டா' பயன்படுத்த விரும்புகிறவர்கள் 49 ஓ படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தேர்தலில் மொத்தம் 1,486 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகளும் களம் இறங்கி உள்ளன. தி.மு.க. உள்பட மற்ற கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 22-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. பிற்பகல் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications