எந்த பிரச்னையாக இருந்தாலும் வீதிக்கு வந்து போராடுவோம் - ஆர்.ஜே. பாலாஜி

தமிழர்களை இனி யாரும் ஏமாற்ற முடியாது. எந்த பிரச்சினை என்றாலும் வீதிக்கு வந்து போராடுவோம் என்று ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர். மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை சந்திக்க வந்த ஆர்ஜே பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.

No one can cheat Tamils anymore, says RJ Balaji

அப்போது அவர், மாணவர்கள் அமைதியான முறையில் போராடி வருகின்றனர். யாரையும் கஷ்டப்படுத்தவில்லை. இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம் என்றால், அதற்காக இப்படி ஒன்று சேர்ந்து போராடுவது நம் ஒற்றுமையின் அடையாளம் என்றார்.

இனி எந்த பிரச்னையாக இருந்தாலும் வீதிக்கு வந்து போராடுவோம். விவசாயி தற்கொலை, கல்விக்கொள்ளை என்று எந்த பிரச்னை என்றாலும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள். இனியும் தமிழன் ஏமாற மாட்டான் என்றும் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+