அட, மதுசூதனை அப்பவே "சின்னம்மா" நீக்கிட்டாங்களே.. வைகைச்செல்வன் டென்ஷன்!
சென்னை: கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்றுகூட தெரியாமல் மதுசூதனன் இருப்பது பரிதாபத்துக்குரியது என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். சசிகலா எப்போதோ மதுசூதனனை கட்சியில் இருந்து நீக்கிவீட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அதிமுக அவைத் தலைவரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மதுசூதனன் இன்று அறிவித்தார். இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாகவது, "கட்சியில் இருந்து நீக்குவதற்கும் கட்சியில் சேர்ப்பதற்கும் அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு மட்டும் தான் அதிகாரம் உள்ளது. யாருக்கு அதிகாரம் உள்ளத என்பது கூட தெரியாமல் மதுசூதனன் இத்தனை நாள் கட்சியில் இருந்திருப்பது பரிதாபத்துக்குரியது.
சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. எப்போதுமே சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர்.
பொதுச்செயலாளர் சசிகலா எப்போதோ மதுசூதனனை நீக்கி விட்டார்.
சசிகலா தரப்பின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றிருப்பதை ஓ.பன்னீர்செல்வத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என ஓபிஎஸ் அணி செயல்படுகிறது. அதிமுகவை பிளவுப்படுத்தலாம் என்ற ஓபிஎஸின் பகல் கனவு பலிக்காது". இவ்வாறு வைகைச்செல்வன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications