தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் தங்கமணி பேட்டி
விவசாயிகளுக்கு வழங்கபடும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது எனவும், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்: தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இரவு சுமார் 7 மணி நேரமாக மின் ஏற்பட்டது. அதிகாலை வரை நீடித்த மின் தடையால், மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். தண்டையார்பேட்டை துணை மின் நிலையத்தில் மின் பழுது ஏற்பட்டதால் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இலவச மின்சார திட்டங்கள் தொடரும்.- இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரமும் ரத்து செய்யப்பட மாட்டாது தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. மின்வாரியத்திற்கு ரூ 12,000 ஆயிரம் கோடியாக இருந்த இழப்பு ரூ 3000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 26-ம் தேதி மின்பாதையில் ஏற்பட்ட பழுதால் சென்னையில் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications