தீயில் எரியும் சென்னை சில்க்ஸ்.. கொளுத்தும் வெயில்... கரண்ட் இல்லாமல் தவிக்கும் தி.நகர் மக்கள்!
சென்னை தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தியாகராயர் நகரில் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புழுங்கும் அனலில் ஃபேன் கூட போட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள சென்னை சில்க்ஸின் குமரன் தங்க மாளிகைக் கடையில் இன்று அதிகாலை 4 மணிக்கு தீப்பற்றியது. 7 அடுக்குகளை கொண்ட அந்த மாடியில் தரைத்தளத்தில் பற்றிய தீ மெல்ல மெல்ல மேல் தளங்களுக்கும் பற்றியது.
10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் சென்னை சில்க்ஸ் கட்டிடம் அபாயகரத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

புகை மண்டலம்
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. நவீன கருவிகள் மூலம் புகை வெளியே கொண்டுவரப்பட்டு வருகிறது.

கொழுந்துவிட்டு எரியும் தீ
தீ கட்டுப்படுத்த முடியாத அளவில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. கட்டட பகுதியில் உள்ள மக்கள் 100 மீட்டருக்கு அப்பால் வெளியேற்றப்படுகின்றனர்.

அபாயகரமான பகுதி
ஏற்கனவே இப்பகுதி அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தீ எரிந்து வரும் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கட்டடத்தின் சுவர் இடிப்பு
இதனால் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் சுவரை இடித்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு அறிவுறுத்தல்
தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. கட்டடம் உள்ள பகுதியில் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம் துண்டிப்பு - தவிப்பு
தீ விபத்துக்காரணமாக காலை முதலே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் ஏசி, ஃபேன் இல்லாமல் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

வியாபரம் பாதிப்பு
அருகில் உள்ள மற்ற வணிக நிறுவனங்களும் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டரை வைத்து ஓட்டி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி நடைபாதி வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications