மழை நீர் தேங்குவதால் சென்னையில் தொற்று நோய் பரவும் அபாயம்: குஷ்பு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்னும் 5 நாட்களுக்கு சென்னையில் எப்படி தாக்குப்பிடிக்க போகிறோம் என்று கவலையாக உள்ளது என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான, குஷ்பு கூறியுள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றிடம் பேசிய குஷ்பு "அடுத்த 5 நாட்களுக்கும் மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை, வெள்ளத்தில் மிதக்கிறது. அடுத்த 5 நாட்கள் எப்படி தாங்கப்போகிறோம் என்று தெரியவில்லை.
மாநகராட்சி நிர்வாகம், அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததுதான் இந்த இடர்பாட்டுக்கு காரணம். சென்னையில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது, தொற்றுநோய்களை உருவாக்கிவிடும். கழிவு நீர் அகற்ற வசதி ஏற்படுத்தி கொடுக்காததுதான் இதற்கெல்லாம் காரணம்". இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications