அதிர்ச்சி.. மதுரை சிறையில் இந்தித் திணிப்பு... இந்தி, ஆங்கில டிவி சானல்கள் மட்டுமே ஒளிபரப்பு!
மதுரை மத்திய சிறையில் இந்தி, ஆங்கில சேனல்கள் மட்டுமே ஒளிபரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை மத்திய சிறையில் இந்தி, ஆங்கில சேனல்கள் மட்டுமே ஒளிபரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சிறையில் உள்ள டிவிக்களில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம். அதேபோல் மதுரை மத்திய சிறையில் வழக்கமாக தமிழ் சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இந்த சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளது. திடீர் என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை மத்திய சிறையில் இந்தி ஆங்கில சேனல்கள் மட்டுமே ஒளிபரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சேனல்களை ஒளிபரப்ப கோரி மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள், தமிழக டிஜிபி மூன்று வாரங்களில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறையில் கூட, தமிழுக்கு இடமளிக்கப்படாதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications