தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு யாரும் தடை போட முடியாது - கார்த்திக்
மதுரை: தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு யாரும் தடை போட முடியாது என அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் பொது மக்கள் 3வது நாளாக தொடர்ந்து வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏந்தியும், ஜல்லிக்கட்டு மாடுகளுடன் மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அருகே இரண்டு பேர் மண்ணெண்ணெய் கேன்களுடன் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுப்டடனர். இதையடுத்த தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பேச்சவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான கார்த்திக் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அலங்காநல்லூரில் அனுமதியை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இன்று நான் அலங்காநல்லூர் செல்வதை காவல் துறையினர் தடுத்தால் கைதாகவும் தயாராக இருப்பதாகவும் தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு யாரும் தடை போட முடியாது எனவும் கார்த்திக் தெரிவித்தார்.
நாடாளும் மக்கள் கட்சி சார்பில் கடந்த 10 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக் இன்று அலங்காநல்லூர் செல்ல இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications